உன்னை விடமாட்டேன் – பகுதி 77
தமையனிடம் பேசிக்கொண்டிருந்த தேனரசி கதவு தட்டும் ஓசை கேட்டு கதவைத் திறந்தாள். “இந்தாம்மா மூன்றுபேருக்கும் இரவு உணவு கொண்டுவந்திருக்கிறேன். நீ பார்த்துக் கொள்ளம்மா. மாப்பிள்ளை! சூர்யகலா எப்படி இருக்கிறாள்? கூட்டிக்கொண்டுவந்திருக்கக்கூடாதா?” தன்விழி நீரைக் கட்டுப்படுத்தியபடி பேசிய ரிஷியின் தாயாரிடம் தன் தாயைக் கண்டான் “அம்மா! கவலைப்படாதீர்கள். சூர்யகலா சுகமாக இருக்கிறாள். திரும்பவும் இங்கே வரும்போது கண்டிப்பாக கூட்டி வருகிறேன்.என்று கூறிவிட்டு, சூர்யகலா தாத்தாவுடன் சேர்ந்து பறவைகளுக்கு உணவளிப்பது, அங்குள்ள பெண்களுடன் விளையாட்டைக் கற்று விளையாடிக்கொண்டிருப்பது, பிறகு கைவினைப் பொருட்களை செய்து பார்த்துக் கொண்டிருப்பதையெல்லாம் விலாவாரியாக விவரித்தான் மலையரசன். அங்கு அவள் சந்தோஷமாய் ஒன்றி வாழ்கிறாள் என்பதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தாள். சரி சரி நேரமாகிவிட்டது. நீங்கள் இருவருமாய் சாப்பிடுங்கள் என்று சென்றுவிட்டார். என்ன இருவரா? என்று நினைத்தான் மலையரசன். மலையரசன் அப்போதுதான் கவனித்தான், ரிஷி தன்னுடன் சாப்பிடாமல் தனியே சாப்பிட்டு முடித்துவிட்டு, கம்யூட்டரில் வேலையைக் கவனிக்கிறான் என்று. அவன...