Posts

உன்னை விடமாட்டேன் – பகுதி 35

  தேனரசிக்கு நேற்றிலிருந்து வீடே நரகம் ஆயிற்று. நடத்தை கெட்டவள் போல. தாய் பேசினால் எப்படி இருக்கும்? போதாக்குறைக்கு நீ செத்தால் பரவாயில்லை. நீ ஏன் பிறந்தாயோ? என்ற வார்த்தைகள் ஈட்டியை போல் அவள் நெஞ்சைப் பிளந்தன. பெரியம்மா கூட உனக்கு எப்படி கல்யாணம் ஆகும் என கவலைப்பட்டாளே தவிர தாயைக் கண்டிக்கவில்லை. பாட்டியும் ஒத்து ஊதினாள். இம்மாதிரியான சூழ்நிலையை அவள் இதுவரை கண்டதில்லை. அவளால் தாங்க முடியவில்லை. தேனரசி மாலுச்சாமியை நினைத்துக் கொண்டாள். ‘ உனக்கு உப்பு, மிளகு எடுத்து வச்சதுல ஆரம்பிச்ச பிரச்சினை பெரிதாக மாறுதே தவிர குறையக் காணும். கேட்கக் கூடாத வார்த்தையெல்லாம் கேட்டுட்டேன். இனி நான் உயிரோட இருக்கணுமா? முடியாது.. நான் யாருக்கும் பாரமா இருக்க விரும்பல. என்னை கண்டிக்கவும் வேண்டாம். கல்யாணம் பண்ணிக்கொடுக்கவும் வேண்டாம். தற்கொலை பண்ணா உன்கிட்ட வரமுடியாதுன்னு சொல்வாங்க. ஆனால் எனக்கு வேற வழி தெரியல. உன்னை மனசில் நினைச்சுகிட்டு தற்கொலை பண்ணிக்க போறேன். நீதான் எல்லாத்துக்கும் பொறுப்பு.’ என நினைத்துவிட்டு, தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள். முடிவில் இரவில் அனைவரும் உறங்கிய பின் குடிலை விட்டு வ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 34

 அடுத்த நாள் காலை தாத்தா ராசாளியைக் கிளப்பிக் கொண்டு ரிஷியின் கால் கட்டை அவிழ்த்தார். முன்பே தயாராக வைத்திருந்த எண்ணெயை காலில் ஊற்றி அழுத்தி தேய்த்தவர், “ரிஷி! நேத்து ராத்திரி காலை வேகமா எதற்காவது அசைச்சியா?” என்று கேட்டார். மிகுந்த வியப்புடன் தாத்தாவிற்கு பதில் சொல்ல முற்பட்ட ரிஷியை முந்திக் கொண்டு பதில் சொன்னான் மலையரசன். “ஆமாம் தாத்தா! என்னாலதான் அவன் காலை அசைச்சான். ஏதும் பிரச்னையா தாத்தா” என்றான் பதற்றத்துடன். “அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை. பயப்படாத.” என்றவர் காலுக்கு பயிற்சி கொடுத்தார். பிறகு, ரிஷியிடம், “என்ன ரிஷி! ஒரு வழியா மலையரசனை மன்னிச்சிட்ட போலிருக்கு. இதுதான் சரி. முட்டாள்தனமா யார் நடந்துகிட்டாலும் மன்னிக்க கத்துக்கணும் ரிஷி!” என்றார். தாத்தா, “மலையரசன் அறிவுபூர்வமா மன்னிப்பு கேட்டான். அதான் கொடுத்துட்டேன் தாத்தா. உணர்வுபூர்வமா, முட்டாள்தனமா மன்னிப்பு கேட்டிருந்தா கொடுத்துருக்க மாட்டேன்.” என்றான் ரிஷி. தாத்தா சிரித்தபடி, “ரிஷி உனக்கு தூக்குணாங்குருவியும் குரங்கும் கதை தெரிஞ்சிருக்கும். முட்டாள்கள திருத்த முயற்சி செஞ்சா சில நேரம் அது நமக்கே கெடுதலா மாறிடும். அதனால...

உன்னை விடமாட்டேன் – பகுதி 33

 தாத்தா, “அம்மா, தேனு! ரிஷி என்ன பண்ணாலும் அதை நாங்க பார்க்க மாட்டோமா? நாங்க என்ன செத்தா போயிட்டோம். பொட்ட பிள்ள செய்ய கூடாததை செய்துட்டு விளக்கெண்ணய் விளக்கம் சொல்றியோ?” கோபத்துடன் கேட்டார். பின் அங்குள்ள பெண்மணிகளிடம் “அம்மா! தேனரசிய எக்காரணத்த கொண்டும் வெளியே விடாதீர்கள். வீட்டுக்குள்ளயே இருக்கட்டும். வெளியே விட்டீங்கன்னா பொல்லாப்பு வந்து சேரும். அனுபவஸ்தன் சொல்றேன். கண்டிப்பா கேட்டு நடங்க. பின்னால எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னா தேனு வீட்டுக்குள்ளதான் இருந்தாகணும். சொல்ல வேண்டியத சொல்லிட்டேன். அம்புட்டுதான்.” என்று சொல்லி விட்டு ரிஷியின் காலுக்கு எண்ணெய் தயாரிக்க ஏற்பாடு செய்ய போனார். தேனரசிக்கு பற்றிக் கொண்டு வந்தது. அவள் மனதிற்குள், “நீங்க அவ்வளவு தெளிவா இருந்தா எனக்கேன் இந்த நிலைமை தாத்தா! இப்பவும் தப்பு பண்ண மாதிரி என்னயத்தான அடைச்சு வைக்கீறீங்க” என்று எண்ணிக் கொண்டாள் வெளியில் வாய் விட்டு சொல்ல முடியாமல். தேனரசிக்கு கட்டுக்காவல் போடப்பட்டது. ரிஷிக்கு மலையரசன் இரவு உணவு கொண்டு வந்தான். ரிஷி அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மலையரசன், “ரிஷி! என்னய மன்னிச்சுரு. நான் மன்னிக்க ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 32

 சிரித்த முகத்துடன் பேசியவனின் முகம் ‘தவறு செய்பவர்களை நான் தண்டிக்காமல் விடுவதில்லை.’ என்று சொல்லும்போது மட்டும் கோபத்தின் கனலைக் காட்டியது. தாத்தாவின் முகத்தில் பயம் படர்ந்தது. ‘தேனரசியை தண்டிக்காமல் விட மாட்டானோ?’ என எண்ணினார். அதனால் அவர் ரிஷியிடம், “அறிவில்லாமல், அனுபவமில்லாமல் செய்யும் தவறுகளை மன்னிக்கலாம் இல்லையா ரிஷி.” என்றார். ரிஷியோ, புன்னகையுடன் “அதெப்படி முடியும் தாத்தா! என்னிடம் அறிவில்லாமல், அனுபவமில்லாமல் தவறு செய்தால் அறிவும், அனுபவமும் புகட்டப்படும். அதனால், தாங்கள் கவலையே பட வேண்டாம்.” என்றான் சிரித்தபடி. தாத்தாவிற்கு ஒன்று மட்டும் புரிந்தது. இவன் மிக சாதாரணமாக பழகினாலும் அசாதாரணமானவன். இவன் இளைய வயதினன் என்றாலும் இவனின் அறிவு, சாமர்த்தியம், ஒருவரை கணிக்கும் திறன் தன்னுடைய அனுபவத்துடன் போட்டி போடும் அளவிற்கு உள்ளது. குற்றவுணர்வுடன் கதறி அழும் மலையரசனையே இன்னும் மன்னிக்காதவன் தேனரசியை மன்னிப்பானா? அவள் எத்தகைய தவறு செய்தாலும் தன்னுடைய பேத்தி ஆயிற்றே. அவளை ரிஷி எவ்வாறு தண்டிப்பான் என அவரால் கணிக்க முடியவில்லை. ஆனால், ரிஷியிடம் இருந்து தேனரசியைக் காப்பாற்றியே ஆக வேண்...

உன்னை விடமாட்டேன் – பகுதி 31

 மலையரசன், தன் கோபம் முழுவதையும் தங்கை தேனரசி மீது காட்ட முயல அனைவரும் பெரும்பாடுபட்டு அவனை தடுத்தனர். மலையரசன் அவளிடம், “இனி என்னை ‘அண்ணா!’ என்று அழைக்காதே! நான் உன் அண்ணன் கிடையாது. உன்னிடம் எனக்கு பேச்சும் கிடையாது.” என்று கூறி சென்று விட்டான். அனைவரும் அவளைக் கரித்துக் கொட்டினர். தேனரசி தன் தாயிடமாவது ரிஷியைப் பற்றி கூறலாம் என்று பார்த்தால் “உன்னை ஏன் பெற்றேன் என்றே தொியவில்லை. இம்மாதிரியாக, தானே ஆடையைக் கலைத்து நாடகம் ஆடுபவள் இன்னும் என்னென்ன பொய்களை சொல்வாளோ? உன்னால் எனக்கும் சோ்த்தல்லவா கெட்ட பெயர். நீ உயிரோடு இருப்பதை விட சாகலாம்.” என்று தாய் அவளை வாட்டி எடுத்தாள். அங்கு ரிஷி, தாத்தாவைத் தவிர யாரிடமும் பேசவில்லை. இங்கோ, தேனரசியிடம் யாருமே பேசவில்லை. தாத்தாவும் ‘சீ’ என்ற ஒற்றை வார்த்தைக்குப் பின் தேனரசியை பார்க்கவில்லை. ஏனெனில், ரிஷியை அவர்தான் கவனிக்க வேண்டி இருந்தது. தாத்தா, “ரிஷி நீ ரொம்ப கோவக்காரனா இருக்கியே. உன்ன உங்க வீட்டுல எப்படி சமாளிக்கிறாங்களோ? மன்னிக்கவும் கத்துக்கணும் ரிஷி.” விளையாட்டாய் பேசி அவன் கோபத்தை தணிக்க முயன்றார். “நான் மன்னிப்பேன் தாத்தா! அந்த மன்னிப...

உன்னை விடமாட்டேன் – பகுதி 30

 ரிஷி உண்மையில் தவறு செய்திருந்தால் ஒன்று, தேனரசி ரிஷி தன்னிடம் அத்துமீறியதற்காக தாத்தாவிடம் கதறி இருக்க வேண்டும். அல்லது மிகுந்த கோபமாவது வந்திருக்க வேண்டும். இரண்டுமில்லாமல் அவள் தாத்தாவைக் கண்டு தலைகுனிந்தது ஏன்? ‘தன்னுடன் பிறந்தவள், தானே தன்னுடைய ஆடையையும், கூந்தலையும் கலைத்து நாடகமாட எங்கு கற்றுக் கொண்டாள்? இந்த புத்தி எங்கிருந்து வந்தது? நம் தங்கை என நம்பியதற்கு தண்டனையாக எத்தகைய தவறை செய்ய வைத்து விட்டாள். ரிஷியை இனி எந்த முகத்துடன் பார்ப்பது?’ என பலவிதமாக யோசிக்க ஆரம்பித்தான் மலையரசன். மலையரசனுக்கு தங்கையின் மேல் வெறுப்பும், துவண்டிருக்கும் ரிஷியைப் பார்க்கையில் குற்றவுணர்வும் தோன்றியது. காலில் உள்ள பிசகை சரி செய்து பச்சிலை வைத்து கட்டிய தாத்தா மலையரசனைப் பார்த்து, “என்னடா, சும்மா மசமசன்னு நின்னுகிட்டுருக்கிற. ரிஷிக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சில்ல. அம்மாகிட்ட இருக்கிற ஆறின பாலை ரிஷிக்குக் கொடு.” என்றார். மலையரசன் கொடுத்த பாலை ரிஷி கையில் வாங்கவில்லை. சோர்வுடன் இருந்த ரிஷியின் வாயருகே பாலைக் கொண்டு சென்றபோது முகத்தைத் திருப்பிக் கொண்டான் ரிஷி. அப்பொழுதும் மலையரசன் மீண்டும் வ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 29

 திடீரென்று பெருவேகத்துடன் ஓடி வந்தவள் பெருங்குரலெடுத்து “காப்பாற்றுங்கள்” என கதற ஆரம்பித்தாள். ரிஷி அவள் வேகமாக ஓடி வருவதை உணர்ந்து டிரான்ஸ்மீட்டரை மரத்தின் ரகசிய இடத்தில் மறைத்து வைத்து விட்டு கீழே குதித்தான். ரிஷி, தன் தங்கையுடனான டிரான்ஸ்மீட்டர் பேச்சை, தேனரசி பிரச்சனை ஆக்குவாள் என எதிர்பார்த்தான். ஆனால், அவள் ‘காப்பாற்றுங்கள்’ என கதறியது அவனுக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. முதலில் ஓடி வந்தது மாயவன். மலையரசனால் வெளியே வர முடியாமல் கதவைத் தட்டிக்கொண்டிருந்தான். ரிஷி தாழ்பாள் போட்டிருந்தான். ஆடையும், அவளும் கலைந்து போய் அவளிட்ட கதறல் மாயவனுக்கு கோபத்தை உண்டு பண்ணியது. அவன் ரிஷியை பிடித்து அடிக்க ஆரம்பிக்க, மற்றொருவன் மலையரசன் இருக்கும் குடிலை திறந்துவிட்டான். தன் தங்கையின் கோலத்தை கண்டான் மலையரசன். அவன் எதையும் யோசிக்கவில்லை. நேற்று இரவு இவ்வளவு சொல்லியும் தேனரசி மேல் கோபம் கொண்டு இவ்வளவு கீழ்தரமாக நடந்து கொண்டானா? என அவன் கை, காலை முறிக்கும் வேகத்தில் ரிஷியை அடிக்க ஆரம்பித்தான். அதற்குள் வேகமாக வந்த தாத்தா மலையரசனை நோக்கி, “நிறுத்து மலையரசா!” என்று ஆக்ரோஷத்துடன் கத்தினார்....