உன்னை விடமாட்டேன் – பகுதி 45
"என்னை எத்தனை நாள் இப்படியே வைத்திருப்பதாக உத்தேசம்?” என்று கேட்டாள் தேனரசி. ரிஷி அவள் பேசியதைக் கேட்டு வியந்தாலும் எந்த முகமாறுதலையும் வெளிப்படுத்தாமல் “உனக்கு புத்தி வளரும் வரை“ என்றான். அவளுக்கு கோபம் வந்தது. முதலிலேயே தன் கோபம் செல்லாக்காசு என்பதை நடைமுறையில் அனுபவமாகக் கண்டவளாயிற்றே. அவன் வம்புக்கு இழுக்கிறான். மாட்டக்கூடாது என முடிவுகட்டினாள். ‘மலைத்தேனுக்காகத்தானே தன்னைக் கடத்தினான்‘ என எண்ணியவாறு “மலைத்தேன் என்னவாயிற்று?” என்றாள். ரிஷிக்கு தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை. ‘இவளை அடைத்து வைத்ததால் இவருக்கு பைத்தியம் ஏதாவது பிடித்துவிட்டதோ? என எண்ணியவன், “மலைத்தேனா? புரியவில்லை மலைத்தேன் உனக்கு வேண்டுமா? கொண்டுவரச் சொல்லவா!” என்றான். அவனை முறைத்தவள், “நீ மலைத்தேனுக்காகத்தானே எங்களிடத்திற்கு வந்தாய். மலைத்தேன் தர தாத்தா சம்மதித்துவிட்டாரா? என்றாள். உண்மையிலேயே இவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டதோ? என எண்ணினான். ஆனாலும் அவளிடம் பொறுமையாக, “அதுதான் உன் தாத்தாவிடம் அதற்கு இனி முயற்சி செய்யமாட்டோம் என்று உறுதி மொழி கொடுத்துவிட்டேனே.” என்றான். உடனே தேனரசி, “பொய். அப்படி பொ...