உன்னை விடமாட்டேன் – பகுதி 23
அங்கே அவர் கண்ட காட்சி அவருக்கு மிக வியப்பளித்தது. ஏனெனில், 12 போிடமும் சிக்காமல் ரிஷி பயங்கர ஆட்டம் காட்டினான். மலையரசன் சரியான முறையில் முயன்றாலும் மீதிப் போ் செய்யும் தவறையே தனக்கு சாதகமாக்கி தப்பிக்க முயன்றான். மலையரசன் விட்டுவிடக் கூடாதென்று அனைவருக்கும் எங்கு நிற்க வேண்டும் என்றும் எந்தப் பக்கம் அவனை போகவிடக் கூடாது என்றும் பலவித ஆணைகளை பிறப்பித்துக் கொண்டு தப்பிக்க விடாமல் செய்தான். இரண்டு மணி நேரத்திற்கு சற்று குறைவான நேரத்தில் ரிஷியை நெருங்கி பிடித்தனர். ஆனால், ஐயகோ! அவ்வளவு நேரம் பொறுமையுடன் வேடிக்கைப் பார்த்த தாத்தா இப்போது ரிஷியை விட்டுவிடும்படி கூறினாா். மலையரசனுக்கு என்ன செய்வதென்றே தொியவில்லை. கடைசியில், 'சுனையில் நடந்ததையும், இங்கே வந்து திரித்து கூறியதையும் சொல்லிவிட்டு, "ரிஷியை எங்களிடம் விட்டு விடுங்கள் தாத்தா" என்று வேண்டினான். ஆனால், தாத்தாவோ "ஒருத்தன பிடிக்க 12 பேரா? வெக்கமாயில்ல. ஒத்தைக்கு ஒத்தை நின்னுபிடிச்சி இவ்வளவு நேரம் ஆனா கூட பரவாயில்ல. இத்தன பேரு இவ்வளவு நேரமா? அதெல்லாம் முடியாது. அவன் திறமைய மதிச்சி ஒழுங்கு மரியாதையா அவன பேசாம விட்ட...