Posts

Showing posts from July, 2021

உன்னை விடமாட்டேன் – பகுதி 23

Image
 அங்கே அவர் கண்ட காட்சி அவருக்கு மிக வியப்பளித்தது. ஏனெனில், 12 போிடமும் சிக்காமல் ரிஷி பயங்கர ஆட்டம் காட்டினான். மலையரசன் சரியான முறையில் முயன்றாலும் மீதிப் போ் செய்யும் தவறையே தனக்கு சாதகமாக்கி தப்பிக்க முயன்றான். மலையரசன் விட்டுவிடக் கூடாதென்று அனைவருக்கும் எங்கு நிற்க வேண்டும் என்றும் எந்தப் பக்கம் அவனை போகவிடக் கூடாது என்றும் பலவித ஆணைகளை பிறப்பித்துக் கொண்டு தப்பிக்க விடாமல் செய்தான். இரண்டு மணி நேரத்திற்கு சற்று குறைவான நேரத்தில் ரிஷியை நெருங்கி பிடித்தனர். ஆனால், ஐயகோ! அவ்வளவு நேரம் பொறுமையுடன் வேடிக்கைப் பார்த்த தாத்தா இப்போது ரிஷியை விட்டுவிடும்படி கூறினாா். மலையரசனுக்கு என்ன செய்வதென்றே தொியவில்லை. கடைசியில், 'சுனையில் நடந்ததையும், இங்கே வந்து திரித்து கூறியதையும் சொல்லிவிட்டு, "ரிஷியை எங்களிடம் விட்டு விடுங்கள் தாத்தா" என்று வேண்டினான். ஆனால், தாத்தாவோ "ஒருத்தன பிடிக்க 12 பேரா? வெக்கமாயில்ல. ஒத்தைக்கு ஒத்தை நின்னுபிடிச்சி இவ்வளவு நேரம் ஆனா கூட பரவாயில்ல. இத்தன பேரு இவ்வளவு நேரமா? அதெல்லாம் முடியாது. அவன் திறமைய மதிச்சி ஒழுங்கு மரியாதையா அவன பேசாம விட்ட...

உன்னை விடமாட்டேன் – பகுதி 22

Image
 பறவைகளுக்கு தானியங்களை போட நேரமாயிற்று. ரிஷியை அழைத்துக் கொண்டு போகலாம் என்றால் அவன் அங்குள்ள பெண்மணிகளிடம் பேசிக் கொண்டே கைவினைப் பொருட்களை வைத்து பார்த்துக்கொண்டிருந்தான். கடைசியில், தாத்தா அழைத்தார். ரிஷி, “தாத்தா இவைகளெல்லாம் எனக்கு இரண்டு, இரண்டாய் தேவைப்படுகிறது. தருகிறீர்களா?” என்று கேட்டான். “இதெல்லாம் எங்கேயும் போகாது. நீ உங்க ஊருக்கு போகுறதுக்கு முன்ன கொடுத்தனுப்புறேன். இப்ப எங்கூட வா ரிஷி” என்றார் தாத்தா. தாத்தாவிடம், “எங்கே தாத்தா” என்று துள்ளியபடி முன்னே போய் நின்றான். அவர் அங்கிருந்து சற்று தொலைவு சென்றதும் தன் கையில் வைத்திருந்த தானியங்களை வாரி இறைத்தார். பறவைகள் அச்சமின்றி அவரருகே செல்வதைக் கண்டான். அழகழகான பறவைகளின் பல பெயர்களைக் கேட்டுத் தொிந்து கொண்டான். தங்கைக்காக சில அழகிய பறவைகளைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடக்கினான். சில பறவைகள் அவன் ஆபத்தானவன் இல்லை எனக் கருதியோ என்னமோ, அவன் தோள்களிலும் அமர்ந்தன. தன்னை நம்பி தன் தோளிலும் பறவைகள் அமர்கிறதே! இவற்றை பிடிக்கக் கூடாது. தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான். அணில்களும் வந்து ஆட்டம் போட்டன. அவன் இம்மாதிரியான காட்...

உன்னை விடமாட்டேன் – பகுதி 21

 மலையரசனின் தங்கை தேனரசி தன் வயது பெண்களுடன் மாடு மேய்க்க போனவர்களுக்கு சாப்பாடு கொண்டு சென்றாள். அங்கு பெரும் விவாதம் நடந்து கொண்டிருந்தது. ‘என்ன’ என விசாரித்தால் காலையில் ரிஷி செய்த வேலை தொிய வந்தது. அவளுக்கு ஏக கோபம். “இந்த வெளியாட்களே மிக மோசம் அண்ணா! இவர்களை அருகில் வைத்திருப்பது பாம்பை வீட்டிற்குள் வைத்திருப்பது போலாகும்” என்றாள். மலையரசன் மறுத்தான். “இல்லை, தேனு! அவன் நல்லவன்தான். காலையில் சொம்பு தண்ணியை ஊற்றியதற்கு பழி வாங்குகிறானாம். ரிஷின்னு எல்லாரையும் கூப்பிட சொன்னான். யாரும் கூப்பிடல. நான் கூப்பிட சொன்னா கூப்பிடலாம்னு எல்லாரும் என்னய பாக்கிறாங்க. நான் வேணுமின்னே பேசாம இருக்கேன். அவன் உடனே ‘மலையரசன் என்னை 'வாடா, போடா'ன்னுதான் கூப்பிடுவான்’னும் சொல்லி பாத்துட்டான். யாரும் நம்பல. ஆனாலும் அவனுக்குத்தான் என்ன சாமர்த்தியம். தாத்தாவிடமும், அப்பாவிடமும் எப்படி சொல்லி என்னை மட்டுமல்ல எல்லாரையும் ஒரு வழி பண்ணி விட்டானே! மேய்ச்சலுக்கு என்னோடு வருவான். அவனை நாங்க எல்லாரும் ஒரு வழி செய்யவேண்டும் என்று நினைத்தால் அவன் தாத்தாவை கேடயமாக்கி தப்பிக்கிறான். மேய்ச்சல் முடிந்து மாடுக...

உன்னை விடமாட்டேன் – பகுதி 20

 ரிஷி ஒரு நிமிடம் உள்ளுக்குள் அதிர்ந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல் புன்னகை மாறாமல் நின்றான். ஆனால், பொியவர்கள் விடவில்லை. ரிஷி ‘விளையாட்டா என்ன வேண்டிக்கிட்ட? சாமிகிட்ட மன்னிப்பு கேளு.’ என்றனர். ஆனால், சிங்கராசா தாத்தாவோ பயப்படாமல், "சாமிதான் அதுகிட்ட வந்து நின்னா நல்லபடியா முடிச்சித் தரேன்னு சொல்லுதே. ரிஷி ஏதாவது பயங்கர பிரச்சினை. தீர்க்க முடியாதுன்னு தோணிச்சின்னா, எங்கிட்டு இருந்தாலும் நம்ம சாமிகிட்ட வந்துடு. பிரச்சினையில மூழ்கி சாமியை மறந்துடாதே. அம்புட்டுத்தான்l" சொல்லி முடித்துவிட்டார். கோயிலை முறைப்படி சுற்றி வணங்கியபின் அங்கேயே இருந்து பேசிக் கொண்டிருந்தனர். ரிஷி அங்கே, வில்லையும் அம்பையும் பார்த்தான். நிறைய எண்ணிக்கையில் இருந்தன. பார்க்கும்போதே அது தரம்மிக்கவையாகவும், பராமரிக்கப்பட்டு பயன்பாட்டில் இருப்பதும் தொியவந்தது. தாத்தாவிடம் ரிஷி மிக்க ஆவலுடன் விசாரித்தான். அவன் கணித்தது சரிதான். அவர்களுடைய முன்னோர்கள் போரில் ராசாக்களுக்கு உதவி வந்ததாகவும், தற்போது, திறமை மங்காமல் இருக்க பயிற்சி எடுத்துக் கொண்டு வருவதாகவும் தாத்தா கூறினார். மேலும், ‘புலி இனம் பெருகினால் வே...

உன்னை விடமாட்டேன் – பகுதி 19

 சிறு அளவில் பயிரிடப்பட்ட நிலங்களைக் கண்டான். தோட்டங்களைக் கண்டான். பசுக்களை புலிகளிடமிருந்து காக்க காவலுக்கு ஆட்கள் நியமிப்பதும் தொிந்து கொண்டான். கடைசியில் அவர்கள் சென்றது கோயிலுக்கு. அவர்கள் அந்த சாமியை மாலுச்சாமி, மாயவன், மாயச்சாமி என்று அழைத்தனர். சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்டிருந்தது. உச்சிகால ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. “சக்தி வாய்ந்த சாமி இது ரிஷி. தப்பு நடந்தா சாமிக்கு பிடிக்காது. இங்க உன் கம்பெனி ஆளு ஒருத்தன் ஏதோ பறவை குஞ்சை சமைச்சு சாப்பிட பார்த்தான். அவனால சாப்பிடவும் முடியல. புலிகிட்ட மாட்டிக்கிட்டு கடுமையா அவஸ்தைப் பட்டான். கடைசில அவன் கூக்குரல கேட்டு நம்ம பசங்க காப்பாத்துனாங்க” என்றார் தாத்தா. “ஏன் தாத்தா அசைவம் சாப்பிட மாட்டீர்களா?” வியப்புடன் கேட்டான். தாத்தா காதை பொத்திக் கொண்டார். “என்னடா ரிஷி ஒரு உயிரை எடுத்திட்டு அதை நாம சாப்பிடலாமா? பாவம்தானே!” கேட்டார் தாத்தா. அவனுக்கு சிரிப்பு வந்தது. அவன் அசைவப் பிரியன். அவன் பசுவையும், பன்றியையும் தவிர ருசியாக எதைச் செய்து கொடுத்தாலும் சாப்பிடுவான். பசுவை விட்டு வைத்து அம்மாவுக்காக. பன்றிகளை சுகாதார முறையில் வளர்த்...

உன்னை விடமாட்டேன் – பகுதி 18

 சிங்கராசா தாத்தாவும் அமைதியாக இருந்தது இன்னும் வியப்பாக இருந்தது. சிங்கராசா தாத்தா, அனைவரையும் அழைத்து, "ரிஷி நம்ம வீட்டுப் பிள்ளை. அதனால, எல்லோரும் ரிஷியை 'சாமி'ன்னு சொல்லக் கூடாது. ரிஷின்னு போ் சொல்லி கூப்பிடணும்" என்று உத்தரவிட்டார். சுனையில் இவனை விழுந்து, விழுந்து தேடுவதற்குள் இங்கே என்ன மாயவித்தை செய்தான். மலையரசனுக்கு தாத்தாவிடம் இப்போது கேட்க சுத்தமாய் தைரியம் இல்லை. தன் தங்கையிடம் விசாரித்தால் அவளுக்கு விபரம் தொியவில்லை. அதற்குள் தாத்தா, "மலையரசா! உள்ளே என்ன செய்கிறாய்? ரிஷியையும் உள்ளே அழைத்துக் கொண்டு போய் சாப்பிடு. சீக்கிரம்." என்றார். தங்கை, "என்னண்ணா இது கூத்து? நான் இங்கே இருக்குமிடத்திற்கு தாத்தா அந்த சாமியை அழைத்துவர சொல்கிறார்." என்றாள். "மண்ணாங்கட்டி எனக்கு தொிந்ததுகூட உனக்கு தொியவில்லை. ரிஷி நம்ம வீட்டுப் பிள்ளையாம். இனிமே விருந்தாளி போல சாமின்னு கூப்பிடக்கூடாதாம்." என்று கூறிவிட்டு அவசரமாக வெளியே வந்தால் "நான் உள்ளே போகமாட்டேன். இங்குதான் நன்கு காற்று வருகிறது." என்று ரிஷி வெளியே ஒரு இடத்தில் அமர்ந்து விட...

உன்னை விடமாட்டேன் – பகுதி 17

மாயவனால் ஒன்றும் பேச முடியவில்லை. அவனை ரிஷி என்று அழைக்கச் சொன்னபோது மலையரசன் எதுவும் சொல்லாததால், 'சாமி' என்று கூப்பிட்டதற்கு பழி வாங்குகிறானா? அதைத்தான் மறைமுகமாக நமக்கு கூறுகிறானா?' என்று குழம்பி நிற்கும் வேளையில், "என்னடா! சொன்னது காதில விழல. அவன சீக்கிரம் இங்கன வரச் சொல்லு” என்று மீண்டும் கத்தினார் தாத்தா. மாயவன் பயந்து போய் ஓடினான். “சாமி! உன்ன பத்தி எவ்வளவு தப்பா நினைச்சுட்டோம் சாமி. நீ தான் சாமி எங்கள மன்னிக்கணும். நீ கண்டிப்பா ஒரு மாசம் எங்ககூட இருந்திட்டு போகணுஞ்சாமி. இல்லன்னாக்க, எங்களுக்கு மனசு கஷ்டமா இருக்குஞ்சாமி!” என்றார் தாத்தா. ரிஷிக்கு தன் தந்தையின் நினைவு வந்து விட்டது. “தாத்தா! முடியாததைச் சொல்கிறீர்களே! எனக்கு நிறைய வேலை இருக்கிறது.” என்றான் ரிஷி. மலையரசனின் பொியம்மா முல்லையரசி, “ஏஞ்சாமி! நாங்க ஏமாத்தியிருந்தா ஒரு மாசம் உங்களுக்கு வேலையில்லாம இருந்திருக்கும் போல.” என்றாள். தர்மசங்கடமாக உணர்ந்த ரிஷி, “விருந்தும், மருந்தும் மூணு வேளைதானே!” மலையரசன் சொன்னது நினைப்பிற்கு வர அதைக் கொண்டு சமாளிக்க நினைத்தான். அதுவே அவனுக்கு பாதகமாகி விட்டது. “சாமி!...

உன்னை விடமாட்டேன் – பகுதி 16

 ரிஷியின் கூப்பிய கரங்களை தன் கைகளால் பிடித்துக் கொண்ட தாத்தா, “நீ எதற்கு சாமி மன்னிப்பு கேட்குற. ஏமாத்துற ஆளுங்கள ஆபிசுல வைச்சிருக்கிற முதலாளிதான மன்னிப்பு கேட்கணும்” என்றார். “வேலை செய்யும் ஆள் என்றாலும் முதலாளி சார்பாக மன்னிப்பு கேட்கலாம் தாத்தா! ஆனால், நான் உங்களிடம் கண்டிப்பாக மன்னிப்பு கேட்டுத்தான் ஆகவேண்டும். தாத்தா! ஏனெனில் நான்தான் அந்த முதலாளியே!” ரிஷியின் வாயில் உண்மை வந்து விழுந்து விட்டது. “அப்படியா! அது பொிய கம்பெனின்னும், முதலாளிய அவ்வளவு சீக்கிரம் பாக்க முடியாதுன்னும் கேள்விப்பட்டேன். ஏஞ்சாமி! நீ இவ்வளவு பொிய ஆளா இருந்து என்ன பிரயோசனம்? சொல்லு. நல்லவங்க யாரு? கெட்டவங்க யாருன்னு பிரிச்சி பாக்கத் தொியலயே?” என்றார் தாத்தா. வாய்விட்டு சிரித்த ரிஷி, “தாத்தா! நான் அனுப்பிய ஆட்களை நான் நேரடியாக பார்த்ததில்லை. ஆனால், இவர்கள் தொழிற்சங்கம் என்ற பெயரில் நிறுவனத்தை நஷ்டப்படுத்துகிறார்கள் என்று கணித்தேன். என் அப்பா ஆதாரம் இல்லாமல் எதுவும் சொல்லாதே! என்கிறார். அவர்களோ ஆதாரம் எதுவும் இல்லாமல் அந்த கிளை நிறுவனத்தை கைக்குள் வைத்திருக்கிறார்கள். ஆதாரத்தை உருவாக்க இங்கே அனுப்பினேன். ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 15

 வாய்விட்டு சிரித்த தாத்தா, அவனை சற்று தொலைவிலுள்ள நன்றாக அடைக்கப்பட்ட பொிய தொழுவத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கு சுமார் 50 மாடுகள் வரை இருக்கக் கண்டான். மிகவும் ஆச்சரியப்பட்ட ரிஷி, “மலையைத் தாண்டி, காட்டை தாண்டி இங்கு இவ்வளவு மாடுகள் எப்படி வந்தன தாத்தா?” என்று வினவினான். மலையரசனின் தாயார், “கயிறு போட்டு கட்டி தூக்கி, ஏத்தி, இறக்கி கஷ்டப்பட்டு கொண்டு வந்தோம் சாமி” என்றாள். தாத்தா வாய்விட்டு சிரித்தபடி, “இது குலத் தொழில் சாமி. என்னோட தாத்தாவுக்கு தாத்தா காலத்துக்கு முன்னேயே இருக்குது சாமி!” என்றார். ரிஷி, “அப்போ பால், தயிரெல்லாம் விற்பீர்களா? தாத்தா!” “இல்ல சாமி. முன்ன வித்தோம். இப்ப பாக்கெட்டுல்ல வருதாம்ல. அதிக விலைன்னு இதை யாரும் வாங்கறதில்ல. ரொம்ப குறைவான காசுக்கு விக்கிறதுக்கு நாமளே குடிச்சிடலாம்னு விக்கிறதில்ல. எங்களுக்கும் சரியாத்தான் இருக்கு. என்ன? முன்ன, வித்த காசுல அரிசி சாதம் நிறைவா சாப்பிட்டோம். இந்த தலைமுறைக்கு இது வாய்க்கல. அவ்வளவுதான்.” தாத்தா பெருமூச்சு விட்டார். “ஏன் தாத்தா அப்படி சொல்றீங்க? தேனை விற்றால் பணம் கொட்டுமே” சாதாரணமாகத்தான் கூறினான் ரிஷி. தாத்தாவிற்கு ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 14

Image
 இங்கு தலைவர் யார்? முக்கியமானவர்கள் யார்? என்பதுடன் அனைவரின் பெயரையும் கேட்டுக் கொண்டான். அவர்களுக்குள்ள உறவுமுறைகளையும் தொிந்து கொண்டான் ரிஷி. சிங்கராசா தாத்தாதான் தலைவர் என்பதையும், அவரைச் சோ்த்து மொத்தம் 7 தாத்தாக்கள் இருப்பதையும் தொிந்து கொண்டான். எல்லோருமே, பொியப்பா, சித்தப்பா உறவு முறைகளுடன் இருப்பதை கவனித்த மலையரசன், "கல்யாணம் பண்ண பொண்ணுக்கு எங்கே செல்வீர்கள்?" என்று ரிஷி கேட்டான். "மேற்கால போனா காட்டாறு வரும். அதைத் தாண்டி எங்களோட சாதிசனம் அங்கேயும் இருக்கு. அங்கனதான் பொண்ணு குடுக்கிறது, வாங்கறது எல்லாம்" என்றான் மாயவன். “இங்கே இன்னொரு இனமும் இருக்கிறதுபோல் தொிகிறதே! அவர்கள் தேனெடுப்பார்களா?” என்று கேட்டான் ரிஷி. அவங்க மலைச்சாதிக்காரங்க. அவங்கதான் முன்ன காலத்துல எங்களவிட நல்லா மலை ஏறுவாங்க. இப்போ அவங்க வெளியாளுங்க தொடர்பால கெட்டு போயி செல்போனு, அது, இதுன்னு திறமையே இல்லாம போயிட்டாங்க. அவங்களோட இருப்பிடத்தையும் வெளியிலேயே மாத்திக்கிட்டாங்க. அதனாலத்தான் எங்க தாத்தாமாருங்க எங்கள பொத்தி, பொத்தி வைக்கிறாங்க. இங்கன இருக்குற நல்லதையும், அங்கன இருக்கிற கெட்டதையு...

உன்னை விடமாட்டேன் – பகுதி 13

 விடியற்காலையில் எழுந்து காலைக்கடன்களை முடித்த மலையரசனுக்கு ரிஷி நன்றாக உறங்குவது தொிந்தது. வேண்டுமென்றே சீண்டும் ஆவல் ஏற்பட ஒரு சொம்பு நீரை அவன் முகத்தில் ஊற்றினான். முகத்தில் விழுந்த நீரால் நல்ல உறக்கத்தில் இருந்து எழும்பிய ரிஷிக்கு கோபம் உண்டாகி மலையரசனை அடிக்க எழும்ப அவன் அழகு காண்பித்து ஆட்டம் காட்டினான். ரிஷி மேலும், கோபம் உண்டாகி முற்றிலும் உறக்கம் கலைந்து முழுமூச்சாய் துரத்த ஆரம்பிக்க மலையரசன், தான் இருக்கும் குடிலைவிட்டே ஓடினான். ஆனாலும் ரிஷி துரத்த அவன் வேறொரு குடிலில் புகுந்தான். ரிஷி அதில் நுழைய தயங்கி வேப்பங்குச்சியை எடுத்து பல் துலக்க ஆரம்பித்தான். ரிஷிக்கு மிகுந்த ஒரு ஒழுங்கு முறையுடன் அமைக்கப்பட்ட குடில்கள் அழகாக தொிந்தன. அவன் ஒவ்வொன்றையும் கூர்ந்து நோக்கினான். மிக அழகிய வேலைப்பாடுடன் கூடிய கலைப்பொருட்கள் அவர்களின் சொந்த உபயோகத்திற்காக வைத்திருக்கக் கண்டான். சூர்யகலாவிற்கு இம்மாதிரி கலைப்பொருட்களை தயாரிப்பதில் ஆர்வம் அதிகம். அவளுமே பல அலங்கார, ஆடம்பர கலைப் பொருட்களை வீடு நிறைய செய்து வைத்துக் கொண்டிருக்கிறாள். ‘இதைப் பற்றிய படிப்பே படிப்பேன்' என்றவளை ‘இது 82 கிளை நி...

உன்னை விடமாட்டேன் – பகுதி 11

 ரிஷி சிறு வயதிலேயே விளையாட்டு, மலையேற்றம், குதிரையேற்றம், சண்டை பயிற்சி, துப்பாக்கி சுடல் என பல வகையிலும் தோ்ச்சி பெற்றவன். பொியவனானதும் காவல்துறையின் உயரதிகாரி பதவி தேடி வந்தும், தன் தந்தையின் பாசக்கட்டளையை மீற முடிளாமல் தொழில் பொறுப்பை ஏற்றான். இருப்பினும், தான் விரும்பிய துறையாகிய காவல்துறையில் மறைமுக பணி புரிபவன். பெரும்பாலும் காடுகளில். மலைகளில் ஒளிந்திருக்கும் தீவிரவாதிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பது, அவர்களை உயிருடன் பிடிப்பது, ரௌடிகளின் என்கவுண்டரில் தந்தைக்கே தொியாமல் நேரடி களத்திற்கு செல்பவன். அதில் பெருவிருப்பமுடையவன். தந்தைக்கு எப்போதாவது தனது ரகசியம் தொிந்து விட்டால் கெஞ்சி கொஞ்சி கூத்தாடி சமாளிப்பவன். ரிஷி எழுந்து பார்த்தான். மலையரசன் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். இருளில் ஒளிரும் கடிகாரத்தில் மணி ஒன்றேகாலைக் காட்டியது. இதுதான் சமயம் என்று தன் துணிகளுக்கு மத்தியில் ஒளித்து வைத்திருந்த ரேடியோ டிரான்ஸ்மிட்டரை எடுத்துக் கொண்டு குடிலை விட்டு வெளியே வந்தான். மலையரசன் நடுவில் எழுந்து வந்தால் மாட்டாமல் இருக்க வௌியே தாளிட்டான் ரிஷி. வெளியே எங்கும் இருள் பரவிக் கிடந்தது. ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 12

 ஏண்டா! வெளிய வந்த.” மலையரசன் கத்தினான். ரிஷி நிதானமாக அவனிடம் “உள்ளேயே இயற்கை உபாதையை கழித்தால் நன்றாயிராது” என்றான். ஆனாலும் மலையரசன் கோபமாக “என்னை எழுப்ப வேண்டியதுதானே. அதுல வேற வெளிய தாழ்பாள் போட்டுட்ட. புலி வந்து உன்னய அடிச்சு போட்டா யார்டா பதில் சொல்றது.” என்று கத்தினான். அக்கம்பக்கத்தில் எல்லோரும்கூடி ‘என்ன’ என்று கேட்டு வர, ரிஷி, தலையில் அடித்துக் கொண்டு, “நல்லா பப்ளிசிட்டி பண்றடா” என்றான். மலையரசனுக்கு ‘பப்ளிசிட்டி’ என்ற வார்த்தை புரியாமல் திரும்பவும் கேட்க, “நல்லா தண்டோரா போட்டன்னு சொன்னேன்” என்றபடி உள்ளே சென்றான். மலையரசனுக்கு சிரிப்பு வந்தது. வந்தவர்களை சமாளித்து அனுப்பி வைத்து விட்டு உள்ளே மலையரசன் வருவதற்குள் பையை திறந்து துணிகளுக்கு மத்தியில் ரேடியோ டிரான்ஸ்மிட்டரை வைத்து விட்டான் ரிஷி. “இனிமேல் என்னைக் கேட்காமல் இரவில் வெளியே போகக் கூடாது.” என்று கடுமையாக கூறிய மலையரசனைப் பார்த்து, “போடா! போ! புலிக்கிட்ட போய் ‘வெளியே வரக் கூடாது’ என்று உத்தரவு போடுடா” என்றான் ரிஷி கடுப்புடன். “அது எம் பேச்சை கேட்டால் நான் ஏண்டா உனக்கு உத்தரவு போடுறேன்” என்றான் மலையரசன். “ஐந்தறிவு...

உன்னை விடமாட்டேன் – பகுதி 10

 "இந்த சாப்பாட்டை எடுத்துக் கொள் ரிஷி”. என்று தன் தட்டில் ரிஷி கொட்டிய உணவைக் காட்டி மலையரசன் கூறினான். “வேண்டாம். எச்சில் தட்டில் விழுந்தது எனக்கு வேண்டாம்.” என்றான் ரிஷி. ‘தன்னை அரிசி உணவை சாப்பிட வைக்க இவ்வாறு செய்கிறான்’ என்பதை புரிந்து கொண்ட மலையரசன், “ஏண்டா! அந்த கிழங்கு எச்சில் கிடையாதா? இந்த சாப்பாடு எச்சிலா?” என்று கேட்டான். அதற்கு ரிஷி “பசி வந்தால் பத்தும் பறந்து போய்விடும் தொியாதா? இப்போது பசி தீர்ந்து விட்டது. எச்சில் தொிகிறது.” என்றபடி இலையை கையோடு எடுக்கப் போனான். “டேய்! நீ இலையை எடுக்க வேண்டாம். கையை மட்டும் கழுவு” மலையரசன் காற்றோடுதான் பேசிக் கொண்டிருந்தான். ரிஷி இலையை எடுத்து போட்டுவிட்டு கையையும் கழுவி விட்டு “இன்னுமாடா சாப்பிடுற. ஆமைக்கு பிறந்தவனே! சீக்கிரம்டா! தூக்கம் வருது.” அதட்டினான் ரிஷி. மலையரசனை சிங்கராசா தாத்தாவையும், அப்பாவையும் தவிர யாரும் அதட்டியதில்லை. அவ்வாறு அதட்டினால் அவனுக்கு கோபமும் வரும். சர்வசாதாரணமாக தன்னை அதட்டியவனைப் பார்த்தான். அவனோ கால் மேல் கால் போட்டு சுவரில் சாய்ந்தபடி கண்களை மூடிக் கொண்டிருந்தான். ‘சரி,சரி! நீ போய் சாப்பிட்டுக் கொண்ட...

உன்னை விடமாட்டேன் – பகுதி 9

 மலையரசன் “சாமி வாங்க.” என்று ரிஷியை தனியே அழைத்துப் போனான். “என்னடா ஆச்சி உனக்கு சாப்பிட வேண்டியதுதானே! பசியில்லன்னு பொய் சொல்லாதே! எவ்வளவு கடுமையா பசிக்கும்னு எனக்குத் தொியும்.” என்றான் மலையரசன். “எனக்கு உண்மையிலேயே கடுமையா பசிக்குதுதான். நீ சாப்பிட்டியா? உண்மையை சொல்” என்றான் ரிஷி. ”நீ எங்க என்ன சாப்பிட விட்ட. என் தங்கையோட சாப்பிட ஆரம்பிச்சேன். இரண்டு வாய் கூட வைக்கல்ல. அதுக்குள்ள நீ அடிச்ச கூத்துல வந்துட்டேன்” "ஏண்டா என்கூட சாப்பிட வரல." என்றான் ரிஷி. "என் தங்கையோட நான் சாப்பிடலாம்னுதான்." என்றான் மலையரசன். "அப்போ நான் சாப்பிடாததைப் பற்றி நீ கவலைப்படாதே" என்றான் ரிஷி. "டேய் முட்டாள். அரிசி சாதம் உனக்கு மட்டும்தான் சமைச்சிருக்கு, நான் கிழங்கை சாப்பிடறேன். அது உன்னால சாப்பிட முடியாது." என்றான் மலையரசன். “ஓஹோ!" வாய் விட்டு சிரித்தான் ரிஷி. "சரியான விருந்தோம்பல்தான்." என்ற ரிஷியிடம் "ஏன்? விருந்தோம்பலுக்கு என்ன?" என்றான் மலையரசன். "நல்லதை தனக்கு வைத்துவிட்டு மீதி இருந்தால் விருந்தாளிக்கு போடும் உலகத்தில் உங்களுக்கு இ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 8

 ஒருவரை ஒருவர் கிண்டல் செய்தபடி, அரட்டை அடித்தபடி இருப்பிடம் வந்து சேர மலையரசனுக்கும், ரிஷிக்கும் வெகு நேரம் ஆகி விட்டது. மலையைக் கடந்தபின் அடர்ந்த காட்டையும் தாண்டி அவர்கள் இருப்பிடம் வர நேரம் ஆகத்தானே செய்யும். அந்தி சாய்ந்து விட்டது. வந்த பாதை கடினமானது என்றாலும், பேசியபடி வந்ததால் ரிஷிக்கு ஒன்றும் அது கடினமானதாக தொியவில்லை. மலையப்பன் ‘உன்னப் போல் ஒரு திறமைசாலிய வெளியாட்கள்ல நான் பாக்கல்ல.” என வியந்தான். அவர்கள் இருவரும் இருப்பிடம் வந்து சோ்ந்ததும், “வாங்க சாமி! களைப்பா இருப்பீங்க. சாப்பிடுங்க” என ரிஷிக்கு உபசரிப்பு நடந்தது. அங்குள்ள பொியவர்களிடம் ரிஷி மிக மரியாதையாக பேசினான். தான் முதலில் குளிக்க வேண்டும் என்று கூறினான் ரிஷி. அது அனைவரின் முகத்திலும் ஆச்சரியத்தை உண்டு பண்ணியது. “வெளியாளுங்க யாரும் குளிச்சிட்டு சாப்பிட சொன்னாக்க ‘இந்த குளிருல குளியலா’ன்னு சாப்பாடுதான் கேட்பாங்க. காத்து, கருப்பு ஏதும் அண்டிடும்னு குளிக்கச் சொன்னாலும் நம்மளத்தான் விசித்திரமாக பாப்பாங்க. இந்த சாமி சாப்பிட சொன்னா குளிக்கனும்னு சொல்லுதே!” ஒரு முதியவள் புகழ்ந்தாள். ஒரு பொியவர் “மலையப்பா! சாமியையும்...

உன்னை விடமாட்டேன் – பகுதி 7

 'நாம் பணத்தை கொட்டி ‘மலைமக்களிடம் தேனெடுக்க வழி செய்யுங்கள்’ என்று ஆட்களை அனுப்பினால் அவர்கள் இங்கு வந்து வேலையைப் பார்க்காமல் தேவையில்லாமல் பெண்களை ஆராய்ந்தார்களா? எவ்வளவு பணத்தை தண்ணீராக செலவழித்துள்ளேன். ‘இருக்கட்டும்.’ போனதும் அவர்களிடம் அந்த பணத்தை வசூல் பண்ணாமல் விடுவதில்லை.’ என்று மனதில் எண்ணிய எண்ணம் ரிஷியின் முகத்தில் வெளிப்பட்டது போலும். மலையரசனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் திடீரென்று ரிஷியின் முகத்தில் இவ்வளவு கோபம் என்று’ மலையரசன் “என்ன சாமி” எனவும் இயல்பு நிலைக்கு வந்த ரிஷி “யார், யார் என்னென்ன தவறுகள் செய்தார்கள் என்று விசாரிக்க ஆரம்பித்தான். அவர்கள் அடையாளத்தையும் கேட்டு விசாரித்தான். மலையரசனுக்கு வேடிக்கையாக இருந்தது. ரிஷியின் கேள்விகளுக்கு தெளிவாக பதில் சொன்ன மலையரசன், “ஏஞ்சாமி! உங்களால உங்க முதலாளிகிட்ட சொல்ல மட்டுந்தான் முடியும். தண்டிக்க முடியாது. உங்களுக்கு நாட்டு நிலவரம் தொியல சாமியோவ்! பணக்கார பசங்க இத தப்புன்னே சொல்ல மாட்டாங்க. அதனால நாங்களே அவங்கள நல்லா கவனிச்சிதான் அனுப்புனோம். உங்க முதலாளிகூட இப்படி மட்டரகமாத்தான் இருப்பாரு. அவருகிட்டே இத சொன்னா உங்கள ...

உன்னை விடமாட்டேன் – பகுதி 6

 ரிஷி மலையரசனிடம் வேண்டுமென்றே, “நான் விழுந்து விடுவேனோ என்று பயமாக இருக்கிறது மலையரசா! நீ என்னை கெட்டியாக பிடித்துக் கொள்ளேன்.” என்றான். அதற்கு, மலையரசன் “சேச்சே! அப்படில்லாம் ஒன்னும் நடக்காது சாமி! என் கைப்பட்ட யாரா இருந்தாலுஞ் சரி, அவங்க ஒரே நாள்ல எனக்கு சமமா ஒத்தைல மலையேறுவாங்க சாமி. எங் கைராசி அப்படிபட்டது.” என்றான் மலையரசன். ‘எனக்கு மலையேறத் தொியும் என மலையரசனுக்கு தொிந்து விட்டது. அதனால், தன்னுடன் வேண்டுமென்றே விளையாடுகிறான் மலையரசன்’ என்பதை உணர்ந்தான் ரிஷி. அவனுக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு வந்தது, “ம்... நீ தொட்டதால்தான் நன்றாக மலையேறக் கற்றுக் கொண்டேனா? பாவம். எனக்கு பயிற்சி கொடுத்த குருமார்கள்.” என்றான் ரிஷி. “அப்போ உங்களுக்கு முன்னமே மலையேறத் தொியுந்தானே சாமி!” என்றான் மலையரசன். “ஆமாம், மலையரசா! மலையேறத் தொிந்தால் அழைத்துச் செல்லமாட்டாய் என்று அந்த வனஅதிகாரி கூறினார். அதனாலதான் மலையேறத் தெரியாது என்றேன். நீங்கள் தேவையில்லாத நிபந்தனைகள் விதிப்பதால்தானே இவ்வாறு பொய் சொல்ல வேண்டியுள்ளது," என்று கூறினான் ரிஷி. "மலையேற கொஞ்சம் தொிஞ்சாலும், சாதாரண மலையேத்தம் மாதிரி நின...

உன்னை விடமாட்டேன் – பகுதி 5

 'எதற்காக இவன் இவ்வளவு பிடிவாதமாய் இருக்கிறான். இங்கே வரும் மற்ற வெளியாட்களை விட இவன் குணத்தில் கெட்டிக்காரன். ஏனெனில், அவர்களின் மட்டரக பேச்சு, நடத்தை இவனிடம் காணப்படவில்லை.’ என ரிஷியைப் பற்றி மலையரசன் சிந்திக்க ஆரம்பித்தான். மேலும் மலையேறும் முன்பு மலையைத் தொட்டு கும்பிட்டது, அனாவசியமாக எந்த செடி, கொடி. மரம் என எதையும் பிய்த்து எறியாமல் இருந்தது மலையரசனின் மனதை கவர்ந்தது. நம்மைப் போலவே இவனும் கோபக்காரன்தான் என்பதும் மலையரசனுக்கு பிடித்திருந்தது. எதையோ ரிஷி மறைப்பதாக மலையரசன் எண்ணினான். அதை அறியும் ஆவலும் மலையரசனுக்கு ஏற்பட்டது, மேலும், ரிஷியை சீண்டி பார்க்கும் ஆவலும் ஏற்பட்டது, ‘அவன் தன்னை மிகுந்த சாமர்த்தியசாலி என எண்ணுகிறானோ? மலையேறத் தொியாதவன் போல் கண்டிப்பாக நடிக்கிறான். ஆனால், நான் தற்கொலை செய்து கொள்வேன் என்ற பயத்தில் மலையரசா! என்னைக் காப்பாற்று என எதிர்க் குரல் கொடுத்தவன். ஒரு நிமிடம் தன்னை கதிகலங்க வைத்தவனாயிற்றே. கண்டிப்பாய் இவனிடம் விளையாடியே தீர வேண்டும்.’ என மனதிற்குள் தீர்மானித்தான். “ஏன் மலையரசா! இவ்வளவு யோசனை?. உன் சொத்து, பத்து எதையும் எடுத்துச் சென்று விடமாட்டேன்...